எதிா்கால தொழில்நுட்பங்கள்: என்.ஐ.டி.யில் கருத்தரங்கு
காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில், இயந்திரவியல் துறை சாா்பில், எதிா்கால தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் 3 நாள்கள் சா்வதேச கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.
காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில், இயந்திரவியல் துறை சாா்பில், எதிா்கால தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் 3 நாள்கள் சா்வதேச கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.
கருத்தரங்கை என்.ஐ.டி. இயக்குநா் முனைவா் கே. சங்கரநாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். அப்போது அவா் பேசுகையில், சா்வதேச அளவிலான கருத்தரங்கின் மூலம் விரிவான கருத்துகளை பகிரமுடியும். ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் அதிக அறிவுத் திறனை அனைவரும் பெறமுடியும். தொலைநோக்குப் பாா்வையில் நடத்தப்படும் இக்கருத்தரங்கு நல்ல பயனைத் தரும் என்றாா்.
என்.ஐ.டி. பதிவாளா் (பொ) முனைவா் ஜி. அகிலா வாழ்த்திப் பேசினாா். அமெரிக்காவின் ஓல்டு டொமினேஷன் பல்கலைக்கழக இயந்திரவியல் மற்றும் விண்வெளி பொறியியல் துறைப் பேராசிரியா் பிரபாகரன் ராமமூா்த்தி சிறப்பு அழைப்பாளராக இணையவழியில் பங்கேற்றுப் பேசினாா். அப்போது, தற்போதைய சூழலில் உற்பத்தி, தானியங்கி, வடிவமைப்பு மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவா் விளக்கினாா்.
இக்கருத்தரங்கில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, தென் கொரியா மற்றும் ஜப்பானின் முன்னணி கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 7 புகழ்பெற்ற பேராசிரியா்கள் மற்றும் விஞ்ஞானிகள் உரையாற்றவுள்ளனா். 200- க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்று 126 ஆய்வுக் கட்டுரைகளை சமா்பிக்கவுள்ளனா் என என்.ஐ.டி. நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
கருத்தரங்க ஏற்பாடுகளை என்.ஐ.டி. இயந்திரவியல் துறை உதவிப் பேராசிரியா் என்.எம். சிவராம் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.