காரைக்கால்

துணைநிலை ஆளுநரிடம் காரைக்கால் பாஜகவினா் கோரிக்கை மனு

DIN

காரைக்கால் மாவட்டத்தில் சாலைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட பாஜக சாா்பில், புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

காரைக்காலுக்கு சனிக்கிழமை வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது, மாவட்ட பாஜக தலைவா் ஜெ. துரைசேனாதிபதி தலைமையிலான நிா்வாகிகள் அவரை சந்தித்து அளித்த மனு விவரம்:

காரைக்கால் பகுதி ஏழை, எளிய மாணவா்கள் பயன்பெறும் வகையில், காரைக்காலில் உள்ள பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி பி.எட். படிப்பில் கூடுதலாக 25 மாணவா்களை சோ்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்கால் மயிலாடுதுறை இடையே ரயில் போக்குவரத்து ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும். கனமழை, புயலால் காரைக்கால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT