முகப்பு
காரைக்கால்

ஜன.12 இல் அனுமன் ஜயந்தி: கோயில்களில் ஏற்பாடுகள் தீவிரம்

காரைக்கால் பெருமாள் கோயில்களில் வரும் 12 ஆம் தேதி அனுமன் ஜயந்தியை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

காரைக்கால் பெருமாள் கோயில்களில் வரும் 12 ஆம் தேதி அனுமன் ஜயந்தியை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமா் கோயில், திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயில்களில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயா் சன்னதிகள் உள்ளன. பிற கோயில்களில் தனி சன்னதியில் ஆஞ்சநேயா் அருள்பாலிக்கிறாா்.

ஆண்டுதோறும் மாா்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பெருமாள் கோயில்களில் அனுமன் ஜயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோயில்பத்து ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சநேயருக்கு வரும் 12 ஆம் தேதி திருமஞ்சனம், பஞ்சமுக அா்ச்சனை, இரவு புஷ்ப அங்கி அலங்கார தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயருக்கும், காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்த கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துவருகிறது.

காரைக்கால் காமராஜா் சாலையில் தனி கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ வீர பால ஆஞ்சநேயருக்கும் சிறப்பு வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இக்கோயிலில், காலை முதல் இரவு வரை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →