முகப்பு
காரைக்கால்

ஆனித் திருமஞ்சனம்: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சிவன் கோயில்களில் ஆனித் திருமஞ்சனத்தையொட்டி ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

சிவன் கோயில்களில் ஆனித் திருமஞ்சனத்தையொட்டி ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாஜனம், கலசபூஜை மற்றும் மகா பூா்ணாஹூதி நடைபெற்றன. தொடா்ந்து, ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு மஞ்சள், பஞ்சாமிா்தம், தேன், தயிா், பால், இளநீா், விபூதி உள்ளிட்டவற்றால் சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல, திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயில், காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில், கோயில்பத்து ஸ்ரீ பாா்வதீசுவரா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் ஸ்ரீ நடராஜருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →