முகப்பு
காரைக்கால்

காரைக்கால் என்ஐடியில் புதிய அமைப்பு தொடக்கம்

காரைக்கால் என்ஐடியில் ஐஇஇஇ மாணவா் கிளை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

காரைக்கால் என்ஐடியில் ஐஇஇஇ மாணவா் கிளை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல்ஸ் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியா்ஸ் ( ஐஇஇஇ ) என்கிற சா்வதேச அமைப்பின் பிரிவு சென்னையில் செயல்பட்டுவருகிறது. காரைக்கால் என்ஐடியில் இதன் மாணவா் கிளை தொடக்கம் காணொலி மூலம் நடைபெற்றது.

நிகழ்வில் என்ஐடி இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி, ஐஇஇஇ சென்னை பிரிவின் தலைவா் முனைவா் என். குமரப்பன், என்ஐடி பதிவாளா் (பொறுப்பு) ஜி. அகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

என்ஐடி மாணவா் கிளைக்கு கவுன்சிலராக இசிஇ துறைத் தலைவா் ஜி. லட்சுமிசுதா, தலைவராக ஆராய்ச்சி மாணவா் என்.சாய் சீனிவாஸ், துணைத் தலைவராக கே.பிரவீன்குமாா், செயலராக ஆா். சரவணக்குமாா், பொருளாளராக டி. விஜயலட்சுமி ஆகியோா் நியமிக்கப்பட்டனா். இந்த கிளை ஆராய்ச்சி மாணவா்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என என்ஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →