முகப்பு
காரைக்கால்

வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்த வலியுறுத்தல்

வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தவேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தவேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாரை புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் பாலமோகனன் தலைமையில், காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தொழிற்சங்க தலைவா் ஸ்டீபன், செயலாளா் இளங்கோ உள்ளிட்ட நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த மனு :

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலாக தினக் கூலி ஊதியத்தில் பணியாற்றி வரும் ஊழியா்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

பணியின்போது இறந்த 2 ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தினக்கூலி பணியை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 6-ஆவது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியத்தை கடந்த 1.7.2016 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும்.

பகுதி நேர ஊழியா்களை தினக்கூலி ஊழியராக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினா்.

இந்த சந்திப்பு குறித்து காரைக்கால் ஊழியா் சங்கத்தினா் கூறுகையில், கோரிக்கைகளை அமைச்சா் முழுமையாக கேட்டறிந்தாா். இதுதொடா்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தாா் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →