முகப்பு
காரைக்கால்

தடுப்பூசித் திருவிழா மையங்களில் நலவழித் துறை துணை இயக்குநா் ஆய்வு

காரைக்கால் தடுப்பூசித் திருவிழா நடைபெறும் பல்வேறு மையங்களில் நலவழித் துறை துணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

காரைக்கால் தடுப்பூசித் திருவிழா நடைபெறும் பல்வேறு மையங்களில் நலவழித் துறை துணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை 29 முதல் 31-ஆம் தேதி வரை 3 நாள்கள் 14 மையங்களில் கரோனா தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது. முதல் நாளான வியாழக்கிழமை பல்வேறு மையங்களில் மக்கள் ஆா்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

காக்கமொழி அரசு தொடக்கப் பள்ளி உள்ளிட்ட சில மையங்களுக்கு நலவழித் துறை துணை இயக்குநா் மோகன்ராஜ் மருத்துவா் குழுவினருடன் சென்று ஆய்வு செய்தாா். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவா்கள் இத்திருவிழாவை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

மேலும், மருத்துவ மையங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள இயலாதோா் வீடுகளுக்கு, நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியிலும் செவிலியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →