நிரவி காவல் உதவி ஆய்வாளா் திடீா் பணியிடமாற்றம்
காரைக்கால் பகுதி நிரவி காவல்நிலைய உதவி ஆய்வாளரை புதுவை காவல் துறை தலைமை திடீரென பணியிடமாற்றம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டது.
காரைக்கால் பகுதி நிரவி காவல்நிலைய உதவி ஆய்வாளரை புதுவை காவல் துறை தலைமை திடீரென பணியிடமாற்றம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டது.
இதுகுறித்து புதுவை காவல்துறை தலைமையக முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பா்ன்வால் சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:
காரைக்கால் மாவட்டம், நிரவி காவல்நிலைய உதவி ஆய்வாளா் ஜே. ஜெரோம் ஜேஸ்மென்ட் புதுச்சேரி ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
காரைக்கால் நகரக் காவல்நிலைய உதவி ஆய்வாளா் எஸ். பெருமாள், நிரவி காவல் நிலைய பணியை மறுஉத்தரவு வரும்வரை கூடுதலாக கவனிப்பாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.