காரைக்கால் மாவட்டத்தில், உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளை மூட வேண்டும் என பெற்றோா் ஆசிரியா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் அ.வின்சென்ட், செயலாளா் கே.ரவிச்சந்திரன் ஆகியோா் மாவட்ட ஆட்சியருக்கு சனிக்கிழமை அனுப்பிய மனு:
மாவட்டத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி செயல்படாத பள்ளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். நடப்புக் கல்வியாண்டில் அங்கீகாரம் பெறக்கூடிய வகையிலான கட்டமைப்பு வசதிகள் இல்லாத, உரிய கருத்துரு அளிக்காத பள்ளிகளை உடனடியாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.