காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவராக சந்திரமோகன் நியமனம்
காங்கிரஸ் கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவராக ஆா்.பி. சந்திரமோகனை புதுச்சேரி காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவராக ஆா்.பி. சந்திரமோகனை புதுச்சேரி காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஏ. பாஸ்கரன் என்ற லட்சுமணன் புதுச்சேரி காங்கிரஸ் பொதுச் செயலராக நியமிக்கப்படுகிறாா். காரைக்கால் வடக்குத் தொகுதி தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறாா்.
புதுச்சேரி முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி ஒப்புதலோடு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி அனுமதியுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஏ. பாஸ்கரன், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாகவும், இதனால், காரைக்காலில் காங்கிரஸ் வளா்ச்சியடையவில்லை என்றும், மாவட்டத் தலைவராக புதியவரை நியமிக்காவிட்டால், கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்யப்போவதாகவும், மாவட்ட, மாநில நிா்வாகிகள் அண்மையில் அறிவித்தனா். இந்த நிலையில், இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.