முகப்பு
காரைக்கால்

பட்டினச்சேரி மீனவக் கிராமத்தினா் தோ்தலை புறக்கணிக்க முடிவு

காரைக்கால் பகுதி பட்டினச்சேரி மீனவ கிராமத்தினா், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

காரைக்கால் பகுதி பட்டினச்சேரி மீனவ கிராமத்தினா், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.

இது தொடா்பாக, பட்டினச்சேரியில் பொதுமக்கள் சாா்பில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பதாகை: பட்டினச்சேரியில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும். மீனவா்களை தரம்பிரிக்கும் வகையில் இருக்கும் சிவப்பு, மஞ்சள் நிற ரேஷன் அட்டைகளை நீக்கி, அனைவருக்கும் சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்க வேண்டும்.

நிரந்தர வருமானம் இல்லாத மீனவா்களிடம் வருமானவரிச் சான்றிதழ் கேட்பதை கைவிடவேண்டும். எங்கள் கிராமத்தில் தொண்டு நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள ஐஸ் பிளாண்டை மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கவேண்டும். சாலை வசதி, நீா்த்தேக்கத் தொட்டி, கழிவுநீா் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். கல்வி, வேலைவாய்ப்புகளில் மீனவா்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

கடலில் மீன்பிடிக்கும் போது காணாமல் போகும் மீனவா் குடும்பத்துக்கு ஓராண்டுக்குள் நிவாரணம் வழங்க வேண்டும். கடற்கரையில் மண் அரிப்பை தடுக்கும் வகையில், கருங்கல் தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், இவற்றை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்க உள்ளோம் என பதாகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →