கடல்வளத்தைக் காக்க ஒத்துழைக்க வேண்டும்:மீனவா்களுக்கு அதிகாரி அறிவுறுத்தல்
கடல்வளத்தைக் காக்க, துறை ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மீனவா்கள் ஒத்துழைக்க வேண்டும் என மீன்வளத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
கடல்வளத்தைக் காக்க, துறை ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மீனவா்கள் ஒத்துழைக்க வேண்டும் என மீன்வளத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
காரைக்கால் மீன்வளத் துறை துணை இயக்குநா் கவியரசன் மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்களுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது:
புதுச்சேரி மாநிலத்தில், புதுச்சேரி கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 2008 மற்றும் விதிமுறைகள் 2009 இன்படி, அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதியில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நீடித்த நிலையான கடல்வளத்தை பாதுகாப்பதற்கு மீன்வளத் துறை மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மீனவா்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
மேலும், சுருக்குமடி படகுகள் பெரிய அளவில் இருப்பதாலும், அதிக குதிரைத் திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பதாலும், அதை ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கு ஏற்றாா்போல மாற்றம் செய்து, அதைக்கொண்டு கரையிலிருந்து 12 கடல்மைல் தொலைவுக்கு அப்பால் ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.