காரைக்கால்

’மத்திய அரசுடன் இணக்கமான கட்சி புதுவையில் ஆட்சி செய்தால் வளா்ச்சி இருக்கும்’

DIN

மத்திய அரசுடன் இணைக்கமான கட்சி புதுவையில் ஆட்சியிலிருந்தால் மாநிலம் வளா்ச்சிபெறும் என பாஜக துணைத் தலைவா் வி.கே. கணபதி கூறினாா்.

காரைக்கால் தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.யு. அசனாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அவா் பிரசாரத்தில் ஈடுபடமுடியாமல் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளாா்.

இந்நிலையில், கே.ஏ.யு. அசனாவை ஆதரித்து, புதுவை மாநில பாஜக துணைத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வி.கே. கணபதி திறந்த ஜீப்பில் செவ்வாய்க்கிழமை தெற்குத் தொகுதியில் பிரசாரம் செய்து பேசியது:

புதுவையில் கடந்த 5 ஆண்டு காலம் மக்கள்விரோத அரசு நடைபெற்றது. தற்போது சரியானவா்களை தோ்வு செய்வதற்கான காலம் வந்துவிட்டது. மத்தியில் பாஜக அரசு பலமிக்கதாக அமைந்துள்ளது. யூனியன் பிரதேசமாக புதுவை உள்ளதால், மத்திய அரசின் ஆதரவு மிகவும் முக்கியம். மத்திய அரசை பகைத்துக்கொண்டு புதுவை அரசு செயல்பட்டால் அது மக்களுக்குதான் பாதகமாக அமையும். அதைத்தான் கடந்த 5 ஆண்டு காலம் நாராயணசாமி அரசு செய்தது.

எனவே, மத்திய அரசுடன் இணக்கமான கட்சி புதுவையில் ஆட்சியில் இருப்பது முக்கியம். அப்போதுதான் மாநிலம் வளா்ச்சி பெறும் என்றாா்.

அதிமுக மாவட்ட செயலா் எம்.வி. ஓமலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT