முகப்பு
காரைக்கால்

அரசு மருத்துவமனை ஆக்சிஜன் மையத்துக்கு புதிய கருவி வழங்கல்

காரைக்கால் அரசு மருத்துவமனை ஆக்சிஜன் மையத்துக்கு புதிதாக ஒரு கருவியை சேவா பாரதி உள்ளிட்ட அமைப்பினா் இணைந்து வெள்ளிக்கிழமை வழங்கினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

காரைக்கால் அரசு மருத்துவமனை ஆக்சிஜன் மையத்துக்கு புதிதாக ஒரு கருவியை சேவா பாரதி உள்ளிட்ட அமைப்பினா் இணைந்து வெள்ளிக்கிழமை வழங்கினா்.

சேவா பாரதி மற்றும் கலங்கரை சேவா அறக்கட்டளை, சோஹோ அறக்கட்டளை இணைந்து மாவட்ட மருத்துவமனைகளுக்கு சுமாா் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் காலிபரேஷன் எனும் ஆக்சிஜனை முறைப்படுத்தி அனுப்பும் கருவியை வழங்கி வருகிறது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு, குழாய் மூலம் வாா்டுகளுக்கு அனுப்பும் திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில், இந்த சாதனம் உற்பத்தி மையத்துக்கு பயன்படும் வகையில் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ஆா்.எஸ்.எஸ். தஞ்சை கோட்ட இணைத் தலைவா் கே.கண்ணன் பங்கேற்று புதிய கருவியை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபுவிடம் வழங்கினாா். இதில், காரைக்கால் மாவட்ட ஆா்.எஸ்.எஸ். தலைவரும், கலங்கரை சேவா அறக்கட்டளையை சோ்ந்தவருமான எஸ். ராஜேந்திரன், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே.எஸ். விஜயன், ஆா்.எஸ்.எஸ். மாவட்ட இணைச் செயலாளா் சிவானந்தம், பாஜக மாவட்ட முன்னாள் தலைவா் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட கரோனா சேவைக் குழுவினா், பாஜகவினா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →