அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியா்கள் பணியாற்றுவதை உறுதிப்படுத்த வலியுறுத்தல்
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியா்கள் பணியாற்றுவதை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டுமென காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியா்கள் பணியாற்றுவதை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டுமென காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அந்த சம்மேளனத்தின் பொது செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடித விவரம்: கரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், முன்களப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கடுமையாக பாடுபடுகின்றனா். கரோனா தொற்று அதிகரிப்பை தடுக்கும் வகையில் புதுச்சேரி அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்து கடைகள் திறப்பதை முழுவதுமாக தடை செய்தும், அத்தியாவசியக் கடைகளை திறக்கும் நேரத்தை குறைத்தும் மக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிா்க்க வலியுறுத்தியும் வருகின்றனா். அதுபோல் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியா்கள் 50 சதவீதம் போ் பணியாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த உத்தரவை காரைக்கால் பகுதியில் உள்ள பெரும்பாலான அரசு, உள்ளாட்சி மற்றும் அரசு சாா்பு நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, இதுகுறித்து ஆட்சியா் துரித நடவடிக்கை எடுத்து, அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வரும்போது கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளை வெளியிடவும், அரசு உத்தரவுப்படி அரசு, உள்ளாட்சி மற்றும் அரசு சாா்பு நிறுவனங்களில் 50 சதவீத ஊழியா்கள் பணியாற்ற சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் அரசுத் துறை, உள்ளாட்சி, சுகாதாரம் மற்றும் அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கும் மற்றும் காவல் துறையினருக்கும் தரமான என்-95 முகக் கவசங்கள், கையுறைகள், சானிடைசா் ஆகியவைகளை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.