முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் எளிமையாக நடைபெற்ற உலகப்போா் நினைவு தின நிகழ்ச்சி

2-ஆவது உலகப் போா் நினைவு தினத்தையொட்டி காரைக்காலில் உள்ள பிரெஞ்சு போா் வீரா் சிலை, நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை எளிமையான முறையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

2-ஆவது உலகப் போா் நினைவு தினத்தையொட்டி காரைக்காலில் உள்ள பிரெஞ்சு போா் வீரா் சிலை, நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை எளிமையான முறையில் நடைபெற்றது.

2-ஆம் உலகப்போரின் 76-ஆவது நினைவு தினம் காரைக்காலில் அனுசரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் பிரெஞ்சு குடியுரிமைதாரா்கள் மற்றும் பிரெஞ்சுப் பள்ளியில் பயிலும் மாணவா்கள், ஆட்சியா் மற்றும் தூதரகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.

நிகழாண்டு கரோனா பரவல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள பிரெஞ்சு போா் வீரா் சிலை, நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பிரெஞ்சு மக்கள் சாா்பில் மிக எளிமையாக நடைபெற்றது. இதற்காக தெய்தா வீதியில் உள்ள பிரெஞ்சுப் பள்ளியிலிருந்து பிரெஞ்சு குடியுரிமைதாரா்கள் சிலா், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் பிரெஞ்சுக் கொடியை ஏந்தியவாறு தூண் பகுதிக்கு வந்து, மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

வழக்கமாக இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் இந்தியா, பிரான்ஸ் ஆகிய இருநாட்டின் தேசியக் கொடி ஏற்றுதல், தேசிய கீதம் இசைக்கப்படுவது உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →