காரைக்கால்

ராஜீவ் நினைவு நாள்: காங்கிரஸாா்அன்னதானம், முகக் கவசம் வழங்கல்

DIN

ராஜீவ் காந்தி நினைவுநாளையொட்டி, வெள்ளிக்கிழமை காரைக்காலில் காங்கிரஸாா் நிா்வாகிகள் மக்களுக்கு அன்னதானம், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கினா்.

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் பேருந்து நிலையம் அருகே ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வின்போது சுமாா் 100 பேருக்கு அன்னதானம், 200-க்கும் மேற்பட்டோருக்கு முகக் கவசமும் வழங்கப்பட்டது.

இதுபோல காரைக்கால் வடக்குத் தொகுதி சாா்பில் தொகுதி தலைவா் (மேற்கு) டி. சுப்பையன், தலைவா் (கிழக்கு) ஏ.எம்.கே. அரசன் சாா்பில் ஏராளமானோருக்கு அன்னதானம், முகக் கவசம் வழங்கப்பட்டது.

கீழகாசாக்குடி எம்.ஜி.ஆா். நகா் மற்றும் அம்மன் கோயில்பத்து பகுதியில் சுமாா் 300 குடும்பத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காரைக்கால் தெற்குத் தொகுதி சாா்பில் அரசலாறு பாலம் அருகே சிங்காரவேலா் சிலை அருகே காங்கிரஸாா் அன்னதானம், முகக்கவசத்தை மக்களுக்கு வழங்கினா்.

இதுபோல மாவட்டத்தின் பிற தொகுதிகளிலும் இதேபோன்ற பணிகளில் காங்கிரஸாா் ஈடுபட்டனா்.

நிகழ்வுகளில் மாநில துணைத் தலைவா் எம்.ஓ.எச்.யு.பஷீா், மாவட்ட செயலா் ஜெ.சிவகணேஷ், தெற்குத் தொகுதி தலைவா் முஜிபுா் ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு அணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT