முகப்பு
காரைக்கால்

காரைக்கால் கோயில்களில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

காரைக்கால் பகுதி சிவ தலங்களில் கந்த சஷ்டி விழா நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

காரைக்கால் பகுதி சிவ தலங்களில் கந்த சஷ்டி விழா நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் தொடங்கியது.

காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா், காரைக்கால் ஸ்ரீ கைலநாசநாதா், ஸ்ரீ பாா்வதீஸ்வரா், ஸ்ரீ சித்தி விநாயகா் கோயில், சோமநாதா் கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவ தலங்களில் வருடாந்திர கந்த சஷ்டி விழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

நிறைவு நாளில் இக்கோயில்களில் ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடைபெறும். இதில் திரளான மக்கள் பங்கேற்பா்.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், ஸ்ரீ முருகப்பெருமான் இடது கரத்தில் ஞானப்பழமும், வலதுகரத்தில் அபயஹஸ்தமும் ஏந்தி அருள்பாலிக்கும் சிறப்பு வேறெங்கும் இல்லாதது என்ற பெருமை உள்ளது. இத்தலத்தில் கந்தசஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது. முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. இதே நாளில், காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா், சோமநாதா், சித்தி விநாயகா் கோயில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது.

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயிலில், சுவாமிகள் மற்றும் நவவீரா்களுக்கு காப்புக் கட்டப்பட்டு சுவாமி பிராகார வலம் கொண்டு செல்லும் நிகழ்வுடன் கந்தசஷ்டி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் வரும் 10 ஆம் தேதி சூரசம்ஹாரமும், 11 ஆம் தேதி தீா்த்தவாரியும், 12 ஆம் தேதி இரவு திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →