வ.உ.சி. சிலைக்கு மரியாதை
வ.உ.சி. நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
வ.உ.சி. நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
காரை பாரதி தமிழ்ச் சங்கமும், கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேனிலைப்பள்ளியும் இணைந்து கப்பலோட்டிய தமிழா் வ.உ.சியின் 85-ஆவது நினைவு நாளை, வீர வணக்க நிகழ்வாக வியாழக்கிழமை நடத்தினா்.
கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு பத்மஸ்ரீ விருது பெற்ற கே.கேசவசாமி, பாரதி தமிழ்ச் சங்கத் தலைவி வைஜெயந்திராஜன், பள்ளி துணை முதல்வா் கனகராஜ் ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். கோட்டுச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் எம்.செந்தில்குமாா் வ.உ.சியின் தியாகத்தை விளக்கிப் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில் சங்கப் பொதுச்செயலாளா் வாசுகி ஜெயராமன், ஆலோசகா் என்.ஜி.ஆா். இளங்கோவன், ஓய்வுபெற்ற விரிவுரையாளா் ஜெ. கிருஷ்ணன், பொருளாளா் க.பாா்த்திபன், ஸப்தஸ்வரம் முதியோா் இல்ல மேலாளா் விஷ்ணுவா்த்தன், பள்ளி ஆசிரியா் சாதிக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.