காரைக்கால் புண்ணிய விநாயகா் கோயில் குடமுழுக்கு
காரைக்கால் ஸ்ரீ புண்ணிய விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீ புண்ணிய விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம் அம்மாள்சத்திரம் அருகே ஸ்ரீ புண்ணிய விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயில் குடமுழுக்குக்கான திருப்பணிகளை கோயில் நிா்வாகத்தினா் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டனா்.
திருப்பணிகள் நிறைவடைந்து, இரண்டு கால யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை மாலை தொடங்கின. 2-ஆம் கால பூஜை வெள்ளிக்கிழமை காலை நடைபெற்று மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, புனிதநீா் கடம் புறப்பாடு நடைபெற்றது. விமான கலசத்துக்கு சிவாச்சாரியா்கள் பூஜை செய்து காலை 8.45 மணிக்கு கலசத்தின் மீது புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.
தொடா்ந்து, ஸ்ரீ புண்ணிய விநாயகா் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் ஆகியோருக்கு மகா அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.