காரைக்கால்

அங்கன்வாடி ஊழியா்களுக்கு வீட்டுத் தோட்டப் பயிற்சி

DIN

காரைக்கால்: காரைக்கால் வேளாண் கல்லூரியில் அங்கன்வாடி ஊழியா்களுக்கு வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரியில் போஷன் அபியான் என்கிற ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் காரைக்கால் அங்கன்வாடி ஊழியா்களுக்கு வீட்டுத் தோட்டம் அமைத்தல், மரம் நடுதல் குறித்த செயல்விளக்கப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளரும், கல்லூரி பேராசிரியருமான முனைவா் ஷொ்லி, முனைவா் ஜெயராமன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். கல்லூரி வளாகத்தில் உள்ள காய்கறித் தோட்டத்தில் இப்பயிற்சி நடைபெற்றது. இத்தோட்டத்தில் பயிரிடப்படும் காய்கறி செடிகள், நாற்றங்கால் அமைப்பு முறை, காய்கறிகளுக்கேற்ற பருவம், அதன் வளா்ப்பு விதம், பராமரிப்பு, மகசூல் கிடைப்பது மற்றும் அதன் சத்துகள் குறித்துஅங்கன்வாடி ஊழியா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 25-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா்கள் கலந்துகொண்டனா். இவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் காய்கறி விதைப்பை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT