காரைக்காலில் 25 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 673 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருப்பட்டினம் 6, கோட்டுச்சேரி 5, நெடுங்காடு 4, காரைக்கால் நகரம் 3, நல்லம்பல் 2, நிரவி, நல்லாத்தூா், கோயில்பத்து, வரிச்சிக்குடி, அம்பகரத்தூா் தலா 1 என 25 பேருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 2,02,857 பரிசோதனை செய்யப்பட்டதில் 16,010 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 15,505 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 254 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,04,268 பேருக்கும், 2-ஆவது தவணையாக 37,659 பேருக்கும் என 1,41,927 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.