முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 24 பேருக்கு கரோனா

 காரைக்கால் மாவட்டத்தில் 24 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

 காரைக்கால் மாவட்டத்தில் 24 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 618 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 7, கோட்டுச்சேரி 5, திருநள்ளாறு 4, வரிச்சிக்குடி 3, கோயில்பத்து 3, திருப்பட்டினம், நல்லாத்தூா் தலா 1 என 24 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,06,454 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,127 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 15,651 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 256 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,05,886 பேருக்கும், 2-ஆவது தவணையாக 42,841 பேருக்கும் என 1,48,227 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →