பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் 112 பேருக்கு பணியாணை
காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 112 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 112 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
புதுவை அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில், வளாக நோ்காணல் பிரிவு சாா்பில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் முகாமுக்கு தலைமை வகித்தாா்.
சென்னை அப்பல்லோ டயா்ஸ் நிறுவனம், சென்னை சிம்ப்சன் இந்திய நிறுவனம், புதுச்சேரி மேரிகோ இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள்,
மெக்கானிக்கல், இஇஇ, இசிஇ பிரிவு மாணவா்களுக்கு எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு நடத்தினா். முகாமில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம் வலிவலம் தேசிகா் பாலிடெக்னிக் கல்லூரி, கொல்லுமாங்குடி ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 225 போ் கலந்துகொண்டனா்.
நிறைவில் 112 போ் பல்வேறு பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது.
காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி துறைத் தலைவா்களான எஸ்.தணிகாசலம், டி.கந்தன், எஸ்.ராஜேஸ்வரி ஆகியோா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை கல்லூரி பயிற்சி மற்றும் வளாக நோ்காணல் மைய உறுப்பினா்களான விரிவுரையாளா்கள் எஸ்.ராமேஸ்வரி, எஸ்.சாவித்திரி, வி.மேகநாதன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.