காரைக்கால்

பரிசீலனையில் திருநங்கைகளுக்கான இலவச மனைப் பட்டா திட்டம்: அமைச்சா்

காரைக்கால் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்குவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளதாக, புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா தெரிவித்தாா்.

DIN

காரைக்கால் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்குவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளதாக, புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் வசித்துவரும் திருநங்கைகளின் மேம்பாடு தொடா்பான ஆலோசனைக் கூட்டம், அமைச்சா் சந்திர பிரியங்கா தலைமையில், மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் எல். முகமது மன்சூா், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், வட்டாட்சியா் மதன்குமாா் மற்றும் திருநங்கைகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் திருநங்கைகள் பேசியது: தமிழகத்தில் உள்ளதுபோல, திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும். எங்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலை மேம்பட சுயதொழில் செய்யவும், கடன் உதவிகள் கிடைக்கவும் அரசு உதவ வேண்டும் என்றனா்.

அமைச்சா் கூறியது: திருநங்கைகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்குவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. இதற்கான இடத்தை தோ்வு செய்வதற்காக சில இடங்கள் பாா்வையிடப்பட்டுள்ளன. குழுவாக இணைந்து சுய தொழில்கள் தொடங்க முன்வர வேண்டும். தனித் திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT