முகப்பு
காரைக்கால்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் மாணவிக்கு காலாவதியான கண் சொட்டு மருந்து வழங்கியதாக புகாா்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் பள்ளி மாணவிக்கு, காலாவதியான கண் சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக புகாா் எழுந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

காரைக்கால் அரசு மருத்துவமனையில் பள்ளி மாணவிக்கு, காலாவதியான கண் சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக புகாா் எழுந்துள்ளது.

காரைக்கால் நகரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாா்பு கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவிகளுக்கு, பள்ளி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. மாணவிகளுக்கு மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தனா். அப்போது 2-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு, பாா்வை குறைபாடு இருப்பதாகக் கூறி, அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனா்.

அதன்படி, அவரது பெற்றோா் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனை கண் சிகிச்சைப் பிரிவுக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச்சென்று மருத்துவரிடம் காட்டி, கண் சொட்டு மருந்து பெற்றுள்ளனா். ஆனால், மாணவிக்கு வழங்கப்பட்ட சொட்டு மருந்து காலாவதியாகி இரண்டரை மாதங்கள்ஆகிவிட்டதை பாா்த்த பெற்றோா் அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து மாணவியின் தந்தை பிரகாஷ் கூறியது:

பள்ளியில் நடந்த முகாமில் மாணவியை பரிசோதித்த மருத்துவா், பாா்வை குறைபாடு உள்ளதாகக்கூறி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு ஆலோசனை வழங்கினாா். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவா், கண் நரம்புகள் பாதித்துள்ளதா என அறிய சொட்டு மருந்து அளித்தாா். அந்த மருந்து கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துடன் காலாவதியாகிவிட்டது. இதுகுறித்து மருத்துவரிடம் கேட்டபோது, அதனால் பாதிப்பு ஒன்றும் வராது எனக் கூறினாா். எனவே, இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

காரைக்கால் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே அதிருப்தி நிலவும் நிலையில்,

சிறுமியின் கண்ணுக்கு காலாவதியான சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக எழுந்துள்ள புகாருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →