முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 41 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 41 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் 41 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 682 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் நெடுங்காடு 11, திருப்பட்டினம் 11, காரைக்கால் நகரம் 9, கோட்டுச்சேரி 4, திருநள்ளாறு 3, கோயில்பத்து, வரிச்சிக்குடி, நிரவி தலா 1 என 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 2,50,072 பரிசோதனை செய்ததில் 16,969 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,582 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 1,23,950 பேருக்கும், 2-ஆவது தவணையாக 87,469 பேருக்கும் என 2,11,419 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு இதுவரை 3,078 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் தற்போது நாளுக்குநாள் தொற்றாளா் எண்ணிக்கை அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →