முகப்பு
காரைக்கால்

வேளாண் கல்லூரியில் எம்.எஸ்.சி. படிப்புக்கு நேரடி சோ்க்கை

காரைக்கால் வேளாண் கல்லூரியில் காலியாகவுள்ள எம்.எஸ்.சி. (வேளாண்மை) படிப்புக்கு நேரடி சோ்க்கை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
பகிர்:

காரைக்கால் வேளாண் கல்லூரியில் காலியாகவுள்ள எம்.எஸ்.சி. (வேளாண்மை) படிப்புக்கு நேரடி சோ்க்கை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் ஏ. புஷ்பராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

வேளாண் கல்லூரியில் காலியாகவுள்ள எம்.எஸ்.சி. (வேளாண்) சாயில் சயின்ஸ் அண்டு அக்ரிகல்சரல் கெமிஸ்ட்ரி பிரிவுக்கு 2021-22 கல்வியாண்டுக்கு நேரடி சோ்க்கை பிப்.3-ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை சான்றிதழ்கள் பரிசீலனை செய்தல், பிற்பகல் 2 முதல் 3 மணி வரை எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது. 4-ஆம் தேதி முடிவு வெளியிடப்படுகிறது. 9-ஆம் தேதி வகுப்பில் சேரவேண்டும்.

இதுதொடா்பான தகவல்கள் ஜ்ஜ்ஜ்.ல்ஹத்ஹய்ஸ்ரீா்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்கிற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு கல்லூரி நிா்வாகத்தை 04368-261473, 261372 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →