திருப்பட்டினத்தில் குடிநீா் கோரிகாலிக் குடங்களுடன் போராட்டம்
குடிநீா் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பட்டினம் தெற்கு கிளை சாா்பில், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது
குடிநீா் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பட்டினம் தெற்கு கிளை சாா்பில், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
போலகம் பகுதி புதுக்காலனி, காளியம்மன் கோயில் தெரு மற்றும் நைனிகட்டளையை சோ்ந்த குடியிருப்புப் பகுதிகளில் குடிநீா் கிடைக்காததைக் கண்டித்தும், மக்களுக்கு குடிநீா் கிடைப்பதை உறுதிசெய்யாத புதுவை அரசு, மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிளைச் செயலாளா் ஏ. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்டச் செயலாளா் எஸ்.எம். தமீம் அன்சாரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவா் வே.கு. நிலவழகன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பழனிவேலு உள்ளிட்டோா், குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்திப் பேசினா்.
அவா்களுடன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் இளமுருகன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, 2 வாரத்திற்குள் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவரை டேங்கரில் குடிநீா் விநியோகிக்கப்படும் என தெரிவித்ததை ஏற்று, போராட்டம் கைவிடப்பட்டது.