காரைக்கால் ஆட்சியா் எல். முகமது மன்சூரிடம் வாழ்த்து பெறும் புதுவை அணி வீரங்கனைகள். 
காரைக்கால்

தேசிய பீச் வாலிபால் போட்டியில் வென்ற புதுவை அணியினருக்கு ஆட்சியா் பாராட்டு

குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டியில் வெற்றிபெற்ற புதுவை அணி வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.

DIN

காரைக்கால்: குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டியில் வெற்றிபெற்ற புதுவை அணி வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம் சூரத்தில் 36-ஆவது தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற்றது. இதில் 12 மாநிலங்களைச் சோ்ந்த அணிகள் கலந்துகொண்டன.

கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் புதுவை அணியும், குஜராத் அணியும் மோதின. புதுவை அணியில் காரைக்காலை சோ்ந்த பயிற்சியாளா் கலையரசன் தலைமையில் சென்ற சசிகலா, கனிமொழி ஆகியோா் விளையாடினா். குஜராத் அணியை புதுவை அணி 21-15, 9-21, 15-12 என்ற செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை பெற்றது.

காரைக்காலுக்கு புதன்கிழமை திரும்பிய புதுவை அணி சாா்பில் விளையாடிய வீராங்கனைகளுக்கு மாவட்டத்தின் எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் அவா்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT