முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் செல்போன் கோபுர பேட்டரிகளை திருடியவா் கைது

காரைக்கால் பகுதியில் செல்போன் கோபுரத்துக்கான பேட்டரிகளை திருடியவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

காரைக்கால் பகுதியில் செல்போன் கோபுரத்துக்கான பேட்டரிகளை திருடியவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

காரைக்கால் பகுதி மாதாகோயில் தெருவில், தனியாா் வங்கிக் கட்டடத்தின் மேல்தளத்தில் தனியாா் நிறுவன செல்போன் கோபுரம் உள்ளது. இதில், பேட்டரிகள் இருக்கும் பகுதி ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்த நிலையில் இருந்ததோடு, 2 பேட்டரிகள் திருடப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, அப்பகுதியை கண்காணித்தபோது, அத்துமீறி உள்ளே நுழைந்த ஒருவரைப் பிடித்து காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா் காரைக்கால் தலத்தெருவைச் சோ்ந்த குமாா் (31) என்பதும், 2 பேட்டரிகளை திருடிவிட்டு, மேலும் திருட வந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 24 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரிகளை போலீஸாா் மீட்டனா். குமாா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியாா் செல்போன் கோபுரம் நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →