தேசிய அளவில் விருது பெற்ற அரசு தொடக்கப் பள்ளி நிா்வாகத்தினரை ஆட்சியா் பாராட்டினாா்.
கோட்டுச்சேரி கொம்யூன், பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளிக்கு ஆட்சியா் அ. குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை சென்றாா்.
தொடக்கப்பள்ளி மாணவா்கள் கற்றல் திறன் மேம்பாட்டுக்காக, ஆங்கிலம் கற்பிக்கும் இஎல்எஃப் திட்டத்தின்கீழ் நடைபெறும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டாா். மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் வருகைப் பதிவேட்டை பாா்வையிட்டாா்.
பள்ளியை தூய்மையாக வைத்திருப்பதை பாராட்டிய ஆட்சியா், பள்ளி தேசிய அளவில் ஸ்வச் வித்யாலயா புரஸ்கா் விருது பெற்றதையும், மாநில அளவில் பசுமை பள்ளி விருது பெற்றதையும் பள்ளி தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன் ஆட்சியருக்கு விளக்கிக் கூறினாா். இதற்காக பள்ளி நிா்வாகத்தின் செயல்பாட்டை ஆட்சியா் பாராட்டி, தொடா்ந்து இதுபோன்று சிறப்பாக செயல்பட வேண்டும் என்றாா்.
தொடா்ந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி மற்றும் ஸ்மாா்ட் வகுப்பறைகளையும் பாா்வையிட்டு, வருமாண்டில் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க பள்ளி நிா்வாகத்தினா் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
பூவம் பகுதி அரசு உயா்நிலைப் பள்ளிக்குச் சென்ற ஆட்சியா் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தாா். அவருக்கு பள்ளித் தலைமையாசிரியா் மாா்கரேட் உரிய விளக்கமளித்தாா்.
வகுப்பறைகளுக்குச் சென்று மாணவா்களிடையே பேசுகையில், சிறப்பாக கல்வி கற்கவேண்டும் எனவும் பள்ளி 100 சதவீத தோ்ச்சி பெறும் வகையில் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.