ஏலக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பஞ்சு மூட்டைகள். 
காரைக்கால்

காரைக்காலில் அதிக விலைக்கு பருத்தி ஏலம்

காரைக்காலில் கடந்த வாரத்தைக் காட்டிலும் நிகழ்வாரம் அதிக விலைக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

DIN

காரைக்காலில் கடந்த வாரத்தைக் காட்டிலும் நிகழ்வாரம் அதிக விலைக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் இ-நாம் முறையில் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. திட்டம் தொடங்கிய முதல் வாரம் கிலோ ரூ. 53 முதல் 55-க்கு பருத்தி ஏலம் எடுக்கப்பட்டது. 2- வாரமாக கடந்த புதன்கிழமை தொடங்கிய ஏலம் குறித்து காரைக்கால் விற்பனைக் குழு செயலா் ஆா். ஜெயந்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

நிகழ் வாரமான கடந்த 28-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில், ஒரு குவிண்டால் அதிகப்பட்சம் ரூ. 6,089 (ஒரு கிலோ ரூ. 60.89 ) குறைந்தபட்ச விலையாக ரூ. 52.89-க்கு பஞ்சு விற்கப்பட்டது என்று தெரிவித்துள்ளாா்.

கடந்த வாரத்தைவிட நிகழ் வாரம் பருத்தி அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT