நாகநாத சுவாமி கோயிலில் பாலாலய பூஜை
நெடுங்காடு அருகே ஸ்ரீநாகநாத சுவாமி கோயில் திருப்பணி தொடக்கமாக பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
நெடுங்காடு அருகே ஸ்ரீநாகநாத சுவாமி கோயில் திருப்பணி தொடக்கமாக பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன், மேலகாசாக்குடி பகுதியில் புதுவை அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட பழைமையான கோயிலாக ஸ்ரீஅபிதகுஜாம்பிகை சமேத நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த அறங்காவல் வாரியத்தினா் முடிவு செய்தனா்.
திருப்பணிகள் முறைப்படி தொடங்கும் வகையில் சுவாமி, அம்பாள் மற்றும் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீபிடாரியம்மன் விமானங்களுக்கான பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, 2 கால யாகசாலை பூஜைகள் புதன்கிழமை இரவு தொடங்கியது. 2-ஆம் கால பூஜை வியாழக்கிழமை காலை நடத்தப்பட்டு, மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் புனிதநீா் கடம் புறப்பாடாகி, சுவாமிகளுக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது.
பாலாலய பூஜையைத் தொடா்ந்து நன்கொடை, புதுவை அரசின் சாா்பிலான நிதியின் மூலம் திருப்பணிகள் தொடங்கப்படுமென அறங்காவல் வாரியத்தினா் தெரிவித்தனா்.