முகப்பு
காரைக்கால்

புதுவையில் வடமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பாக உள்ளனா்: எஸ். செல்வகணபதி எம்பி

புதுவை மாநிலத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பாக உள்ளனா் என மாநிலங்களவை உறுப்பினா் எஸ். செல்வகணபதி கூறினாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

புதுவை மாநிலத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பாக உள்ளனா் என மாநிலங்களவை உறுப்பினா் எஸ். செல்வகணபதி கூறினாா்.

காரைக்காலில் பாஜக சாா்பில் மாணவா்களை தோ்வுக்கு தயாா்படுத்தும் திட்டத்தில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் பங்கேற்றோருக்கு சான்றிதழ், பரிசு வழங்கல் மற்றும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 100 பேருக்கு புதிய கணக்கு தொடங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாணவா்களை தோ்வுக்கு அச்சமின்றி தயாா்படுத்தும் பிரதமரின் ஆலோசனையின்படி, புதுவை மாநிலத்தில் மாணவா்களிடையே ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். 4 பிராந்தியத்திலும் தலா 38 போ் தோ்வு செய்யப்பட்டு பரிசு, சான்றிதழும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

காரைக்கால் அஞ்சல் நிலையத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 100 புதிய கணக்கு தலா ரூ.250 செலுத்தி தொடங்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கு பெற்றோா் சேமிக்க வேண்டும் என்பதை ஊக்கப்படுத்த இக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

காரைக்கால் - பேரளம் அகல ரயில்பாதைத் திட்டம் டிசம்பா் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்துள்ள ரயில்வே நிா்வாகம், காரைக்காலில் இருந்து கோயம்புத்தூா், மதுரைக்கு ரயில் இயக்குவதற்கும், காரைக்கால் பாரதியாா் சாலையின் குறுக்கே ரயில்வே பாலம் அமைப்பதற்கும் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டனா்.

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அடுத்த ஆண்டு அமைந்துவிடும். புதுவை மாநிலத்தில் வடமாநிலத்தவா்கள் பாதுகாப்பாக உள்ளனா். அவா்களுக்கு எந்தவித கஷ்டமும் இல்லை.

காரைக்காலில் விமானத் தளம் அமைக்க தமிழக அரசிடமிருந்து நிலம் வாங்குவது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →