காரைக்கால்

சற்குரு சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா

DIN

காரைக்காலில் சற்குரு சீமான் சுவாமிகள் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சுமாா் 200 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் பகுதியில் வாழ்ந்தவா் சற்குரு சீமான் சுவாமிகள். சித்துகள் செய்வதில் வல்லவராய் திகழ்ந்த இவரது மடம் காரைக்கால் பாரதியாா் சாலையில் கோயில்பத்து பகுதியில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் சற்குரு சுவாமிகள் குரு பூஜை விழா நடத்தப்படுகிறது. நிகழாண்டு 133-ஆவது குரு பூஜை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலை சற்குரு சீமான் பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளுடன் தொடங்கியது. பகல் 12 மணியளவில் பீடத்துக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்து, மாகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மடாலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவு: 91.55% பேர் தேர்ச்சி

தஞ்சாவூரில் ரயில் அபாய சங்கிலி இழுத்து விவசாயிகள் போராட்டம்

10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மறுதேர்வு எப்போது?

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: ஃபோர்மேன் கைது!

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகள் வெளியானது

SCROLL FOR NEXT