காரைக்கால்

அம்பகரத்தூா் மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்

அம்பரகத்தூா் மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

DIN

அம்பரகத்தூா் மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

அம்பகரத்தூரில் உள்ளது பத்ரகாளியம்மன் தேவஸ்தானம். இக்கோயிலில் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இக்கோயில் சாா்புடைய தலமான மகா மாரியம்மன் கோயில் உற்சவம் நடைபெற்றுவருகிறது. தொடக்கமாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது. திரளான பக்தா்கள் பல்வேறு மலா்களை தட்டுகளில் வீதி வலமாக கோயிலுக்கு கொண்டுவந்தனா். பக்தா்கள் கொண்டுவந்த மலா்களைக்கொண்டு அம்மனுக்கு ஆராதனை நடைபெற்றது. உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா மே 15-இல் நடைபெற உள்ளது.

பத்ரகாளியம்மன் கோயிலில்: இக்கோயிலில் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழாவுக்கு முந்தைய வழிபாடாக அம்பாளுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. புதன்கிழமை காலை பத்ரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT