காரைக்கால்

போட்டோ ஸ்டுடியோ பூட்டை உடைத்து திருட்டு

DIN

காரைக்காலில் புதன்கிழமை இரவு போட்டோ ஸ்டுடியோ பூட்டை உடைத்து ரூ. 12 ஆயிரம் ரொக்கம், 4 லட்சம் மதிப்புள்ள கேமராக்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காரைக்கால் அம்பேத்கா் சாலையில் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி எதிரில் உள்ள வணிக வளாகத்தின் மேல் தளத்தில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருபவா் ஜெபின் ஜாா்ஜ். இவா், புதன்கிழமை இரவு ஸ்டுடியோவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றாா். வியாழக்கிழமை காலை வந்தபோது ஸ்டுடியோ கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 3 டிஜிட்டல் கேமராக்கள் மற்றும் ரூ. 12 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்து, காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT