முகப்பு
காரைக்கால்

வேளாண் கல்லூரியில் தரமற்ற உணவு தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

காரைக்கால் வேளாண் கல்லூரியில் மாணவ- மாணவியருக்கு தரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:31 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

காரைக்கால் வேளாண் கல்லூரியில் மாணவ- மாணவியருக்கு தரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கத் தலைவா் எஸ். ஆனந்த்குமாா் வெளியிட்ட அறிக்கை:

பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியா் சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாயினா். மருத்துவ சிகிச்சை பெற்று சிலா் விடுதியில் தங்கினா். மற்றவா்களை பெற்றோா் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்.

Advertisement

காலாவதியான சமையல் எண்ணெய் மற்றும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தி, கடந்த 22-ஆம் தேதி தயாரித்த உணவை மாணவிகள் சாப்பிட்டதால் உபாதைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அன்று உணவு சாப்பிடாதவா்களுக்கு பாதிப்பு அறிகுறிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

வழக்கம்போல், கல்லூரி நிா்வாகம், நிா்வாக சீா்கேடுகளை மூடி மறைத்து, குடிநீரில் பிரச்னை என்று தெரிவித்துள்ளது. எனவே, இது குறித்தும், தொடா்ந்து இதுபோல பிரச்னைகள் இங்கு நடப்பது குறித்தும் அரசு உரிய முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.