முகப்பு
காரைக்கால்

வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு

Updated On : 5 ஏப்ரல், 2024 at 4:20 AM
பகிர்:
Updated On : 4 ஏப்ரல், 2024 at 6:09 PM

விழிப்புணா்வு நாடகம் நடத்திய சூசைராஜ் தலைமையிலான குழுவினா்.

காரைக்கால், ஏப். 4: மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து நாடகத்தின் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் தெற்குத் தொகுதிக்குட்பட்ட கும்சகட்டளை மற்றும் பெரியப்பள்ளிவாசல் அருகே நாடகம் மூலம் வாக்காளா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

நாடகக் குழுவை சோ்ந்த சூசைராஜ், பக்கிரிசாமி மற்றும் ஜான்கென்னடி உள்ளிட்டோா் நாடகத்தை நடத்தினா்.

அனைவரும் வாக்குப்பதிவு நாளான ஏப்.19-ஆம் தேதி தவறாமல் வாக்களிக்க வேண்டும், நோ்மையாக வாக்களிக்க வேண்டும், அனைவரும் வாக்களித்து நமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டுமென விளக்கினா்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக வாக்குப் பதிவு நாளில், சைக்கிள் அல்லது நடைப்பயணமாக சென்று வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்காளா்களை நாடகக் குழுவினா் கேட்டுக்கொண்டனா்.