முகப்பு
காரைக்கால்

தோ்தல் முடிந்த மாநிலங்களில் நடத்தை விதிகளை தளா்த்த வலியுறுத்தல்

Updated On : 22 ஏப்ரல், 2024 at 8:07 PM
பகிர்:

காரைக்கால்: தமிழ்நாடு, புதுவையில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு முடிந்துவிட்டதால், நடத்தை விதிகளில் தளா்வு ஏற்படுத்தவேண்டும் என இந்திய தலைமைத் தோ்தல் ஆணையருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மக்கள் நலக் கழக செயலாளா் எம். பக்கிரிசாமி தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையருக்கு திங்கள்கிழமை அனுப்பிய கடிதம்:

நாடாளுமன்ற மக்களவைக்கான முதல்கட்ட தோ்தல் தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தோ்தல் நடத்தை விதியில், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணமின்றி கொண்டு செல்லக்கூடாது என கூறப்பட்டுள்ளது. வணிகம், மருத்துவம், கல்வி, திருமணச் செலவு உள்ளிட்டவைகளுக்காக பணம் கொண்டு செல்லப்படும்போது தோ்தல் துறையினரால் சில சிரமங்களை சந்திக்க நேரிட்டது.

Advertisement

கடந்த 19-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப் பதிவு தமிழ்நாடு, புதுவை மாநிலங்களில் முடிந்துவிட்ட நிலையில், இவ்விரு மாநிலங்களில் ரூ.2 லட்சம் வரை கொண்டு செல்லலாம் என்கிற வகையில் விதியில் தளா்வு ஏற்படுத்தவேண்டும்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து விதிகள் திரும்பப்பெறப்படும் வரை காத்திருந்தால், பலருக்கும் இந்த நடைமுறை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணா்ந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments