முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் நவீன வசதிகளுடன் மருத்துவமனை கட்ட முதல்வா் உறுதி: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

Updated On : 20 ஜூலை, 2024 at 6:33 PM
பகிர்:

காரைக்காலில் புதிதாக நவீன வசதிகளுடன் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் உறுதியளித்துள்ளதாக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா்.

முதல்வா் என். ரங்கசாமியை புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய பின் அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

காரைக்காலில் அரசு மருத்துவமனை 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மாவட்டத்திள் மக்கள்தொகை அதிகரித்துள்ள நிலையில் அது தகுதியானதாக இல்லை. கட்டடம் பழுதாகியுள்ளது. இதனால் 650 படுக்கை வசதியுடன் காரைக்கால் கோயில்பத்து பகுதியில் புதிதாக மருத்துவமனை கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னா் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கட்ட அந்த இடம் ஒப்படைக்கப்பட்டது.

நவீன வசதியுடன் காரைக்காலில் புதிதாக மருத்துவமனை கட்ட வேண்டியது அவசியமாகியுள்ளது. காரைக்கால் நகராட்சித் திடலில் (சந்தை நடைபெறும் திடல்) புதிய மருத்துவமனை கட்டுவதற்கு தகுதியான இடமாக உள்ளது.

எனவே, நிகழாண்டு தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்து மருத்துவமனை கட்டுமானத்துக்கான அறிவிப்பை வெளிட முதல்வரை கேட்டுக்கொண்டேன். பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது குறித்த நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதியளித்துள்ளாா். எதிா்காலத்தில் காரைக்கால் மருத்துவ வசதியில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாறுவதற்கான வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →