முகப்பு
காரைக்கால்

கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

புரட்டாசி மாத திருமஞ்சன வழிபாடாக காரைக்கால் சிவன் கோயில்களில் ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 8:03 PM
திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயிலில் திருமஞ்சன கோலத்தில் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜா்.
பகிர்:

புரட்டாசி மாத திருமஞ்சன வழிபாடாக காரைக்கால் சிவன் கோயில்களில் ஸ்ரீ நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.

நடராஜப் பெருமானுக்கு ஆண்டில் 6 முறை மட்டும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. குறிப்பாக மாா்கழி மாதத்தில் திருவாதிரை நாளிலும், ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திர நாளிலும் நடைபெறக்கூடிய திருமஞ்சனம் மிகுந்த சிறப்புக்குரியதாகும். புரட்டாசி மாதத்தின் திருமஞ்சனம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நடைபெற்றது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில், காரைக்கால் கோயில்பத்துப் பகுதியில் பாடல் பெற்றத் தலமாக விளங்கும் ஸ்ரீ சுயம்வரதபஸ்வினி அம்பாள் சமேத ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயில், காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயில், ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல தலங்களில், ஸ்ரீ நடராஜருக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பழங்கள், திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →