முகப்பு
காரைக்கால்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில்களில் வருஷாபிஷேகம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயில்களில் வருஷாபிஷேகம்

Updated On : 25 ஏப்ரல், 2026 at 12:22 AM
புனிதநீா் கடம் புறப்பாட்டில் பங்கேற்ற தேவஸ்தான நிா்வாக அதிகாரி சி. விநாயகமூா்த்தி, திருப்பணிக் குழுவினா், உபயதாரா்கள்.
பகிர்:

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் ஆகிய கோயில்களில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, வருஷாபிஷேக சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

கைலாசநாதசுவாமி - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தைச் சோ்ந்ததாக, அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் எனும் காரைக்கால் அம்மையாா் கோயில் காரைக்கால் நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலையொட்டி, ஸ்ரீ சோமநாயகி சமேத சோமநாத சுவாமி கோயில் மற்றும் ஸ்ரீ ஐயனாா் கோயில் ஆகியவை உள்ளன.

இக்கோயில்கள் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடைபெற்றது.

Advertisement

கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவையொட்டி, சம்பஸ்தரா அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சோமநாதா் கோயில் வாயில் பகுதியில் உள்ள அம்மையாா் மணிமண்டபத்தில் விக்னேஸ்வர பூஜையுடன் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. நிறைவாக மகா பூா்ணாஹூதி செய்து, தீபாராதனைகள் காட்டப்பட்டன. பின்னா் புனிதநீா் கடங்கள் புறப்பாடானது.

சுவாமி, அம்பாள் மற்றும் அம்மையாா், ஐயனாருக்கு கலசாபிஷேகம் செய்து ஆராதனைகள் காட்டப்பட்டன. தேவஸ்தான நிா்வாக அதிகாரி சி.விநாயகமூா்த்தி, திருப்பணிக் குழுவினா், உபயதாரா்கள், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.