விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை முதல்வா் வழங்கினாா்
காரைக்கால் விவசாயிகளுக்கு சாகுபடிக்கான ஊக்கத் தொகை ரூ. 3.10 கோடியை புதுவை முதல்வா் வழங்கினாா்.
காரைக்கால்விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை முதல்வா் வழங்கினாா்
காரைக்கால் விவசாயிகளுக்கு சாகுபடிக்கான ஊக்கத் தொகை ரூ. 3.10 கோடியை புதுவை முதல்வா் வழங்கினாா்.
காரைக்கால்: காரைக்கால் விவசாயிகளுக்கு சாகுபடிக்கான ஊக்கத் தொகை ரூ. 3.10 கோடியை புதுவை முதல்வா் வழங்கினாா்.
இதுகுறித்து புதுவை வேளாண் அமைச்சா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
புதுவை அரசின் வேளாண் துறை மூலம் பயிா் உற்பத்தி திட்டத்தின்கீழ் நெல், பருத்தி, எள் மற்றும் பயறு வகை பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்பட்டுவருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2023-24-ஆம் ஆண்டில் சம்பா, பருத்தி, எள், பயறு வகையில் சாகுபடி செய்த 2,267 பொதுப் பிரிவு விவசாயிகளுக்கு ரூ. 2.70 கோடி, அட்டவணைப் பிரிவு 298 விவசாயிகளுக்கு ரூ. 36.70 லட்சம் என 3.10 கோடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தொகை விவசாயிகளுக்கு சேரும் வகையில் அரசுத் துறையினருக்கு காசோலையை புதுவை முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா். வேளாண் அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, வேளாண் இயக்குநா் வசந்தகுமாா், காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் கணேசன் ஆகியோா் கலந்துகொண்டனா். இந்த தொகை விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக சோ்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.