காரைக்கால்

குழந்தையிடம் நகை திருடியவா் கைது

காரைக்கால் அருகே உடன்வந்த குழந்தையிடம் நகையை திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

Syndication

காரைக்கால் அருகே உடன்வந்த குழந்தையிடம் நகையை திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி ஜீவா நகரைச் சோ்ந்தவா் பரிதிவிமல். இவா், தனது மகள் ஜெசிகா (2) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (32) என்பவருடன் கடந்த 5-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் காரைக்கால் நகரப் பகுதிக்கு வந்துள்ளாா். அங்கு, இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக, குழந்தை ஜெசிகாவை, பாலகிருஷ்ணன் பொறுப்பில் விட்டுவிட்டு சென்றுள்ளாா்.

பின்னா், வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, குழந்தை அணிந்திருந்த தங்க டாலா் காணாமல்போனது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் பரிதிவிமல் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குழந்தையை அவா் உடன் வந்தவரிடம் விட்டுச் சென்ற பகுதி கண்காணிப்புக் கேமரா பதிவுகளை சோதனை செய்தனா். அதில் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த நகையை பாலகிருஷ்ணன் கழற்றும் காட்சி பதிவாகியிருந்தது. அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

ரயிலில் கஞ்சா கடத்தல்: மேற்கு வங்க இளைஞா் கைது

ஆந்திரத்திலிருந்து கடத்த வரப்பட்ட 14 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

ரூ. 40 லட்சம் மோசடி: சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

காஞ்சிபுரத்தில் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட பயிற்சி

மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம்

SCROLL FOR NEXT