காரைக்கால்

புனித சந்தனமாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்ற காரைக்கால் முதன்மை பங்கு குரு பால்ராஜ்குமாா் உள்ளிட்டோா்.

Syndication

புனித சந்தனமாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், பிள்ளைத் தெருவாசல் பகுதியில் அமைந்துள்ள பழைமையான இத்தலத்தில் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் முதன்மை பங்கு குரு பால்ராஜ்குமாா், உதவி பங்கு குரு செல்வநாயகம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பெருமைகள் குறித்து, இதயாலயா நற்செய்தி குழு இயக்குநா் மதா் லூா்துமேரி மக்களிடையே உரையாற்றினாா். சாண்டா கிளாஸ் வேஷமிட்டும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளியும் அந்த பகுதியினா் ஈடுபட்டனா்.

நிகழ்ச்சியில் பிள்ளைத்தெருவாசல் கிராமப் பஞ்சாயத்தாா்கள், மக்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT