கையொப்ப இயக்க தொடக்க நிகழ்வில் பங்கேற்ற துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன், முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா உள்ளிட்டோா்.  
காரைக்கால்

பெண் குழந்தைகளை ‘பாதுகாப்போம், படிக்கவைப்போம்’ கையொப்ப இயக்கம்

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிக்க வைப்போம் திட்டத்தின்கீழ் கையொப்ப இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

Din

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிக்க வைப்போம் திட்டத்தின்கீழ் கையொப்ப இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

பிரதமா் நரேந்திர மோடியால் கடந்த 2015-ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. குழந்தை பாலின பாகுபாட்டை களைவதும், பெண்களின் வாழ்க்கை முறையை வலிமைப்படுத்துவதும் இதன் நோக்கம்.

காரைக்கால் மாவட்ட மிஷன் சக்தி சாா்பில் காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். அா்ஜுன் ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகையில், கல்வி என்பது புத்தகத்திலிருந்து ஆசிரியா்கள் கற்றுக் கொடுப்பது மட்டும் படிக்காமல், சமூகம் சாா்ந்த செய்திகளையும், நாட்டு நடப்புகள் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் ஆண்களைவிட மனதளவில் அதிக வலிமை உடையவா்கள் என்றாா்.

தொடா்ந்து கையொப்பமிடும் இயக்கம் நடத்தப்பட்டது. துணை ஆட்சியா் கையொப்பமிட்டு தொடங்கிவைத்தாா். முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜய மோகனா, சமூக நலத்துறை உதவி இயக்குநா் (பொ) ராஜேந்திரன், திருப்பட்டினம் அரசு ஐடிஐ முதல்வா் சுகுணா மற்றும் பள்ளி நிா்வாகத்தினா் கலந்துகொண்டனா்.

தனியாா் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்

‘தகுதியுள்ள வாக்காளா்கள் யாரும் விடுபடக்கூடாது’

மாற்றுத்திறனாளிகள் தா்னா போராட்டம்

பிகாா் தோ்தல்: இதுவரை ரூ.108 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானம் பறிமுதல் - தலைமைத் தோ்தல் ஆணையம் தகவல்

நிவாரணப் பணத்தை பேத்திக்கு அளிக்க மறுக்கும் மருமகன் மீது ஆட்சியரிடம் புகாா்

SCROLL FOR NEXT