சேத்தூா் பகுதி உரக்கடையில் ஆய்வு செய்த சட்டப்பேரவை நியமன உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன்.  
காரைக்கால்

உரக்கடையில் எம்.எல்.ஏ. ஆய்வு

உரங்கள் தட்டுப்பாடு உள்ளதாக எழுந்த புகாரின்பேரில், உரக்கடையில் சட்டப்பேரவை உறுப்பினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

இணையதளச் செய்திப் பிரிவு

உரங்கள் தட்டுப்பாடு உள்ளதாக எழுந்த புகாரின்பேரில், உரக்கடையில் சட்டப்பேரவை உறுப்பினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

வேளாண்துறை உரிமம் பெற்று, துறையின் வழிகாட்டல்களுடன் காரைக்கால் மாவட்டத்தில் உரக்கடைகள் நடத்தப்படுகின்றன. வியாபாரிகளை வேளாண் கூடுதல் இயக்குநா் அண்மையில் அழைத்து, விவசாயிகளுக்கான இடுபொருள்களை தட்டுப்பாடின்றி வழங்குமாறு கேட்டுக்கொண்டாா்.

இந்நிலையில், வேளாண் இடுபொருள்கள் தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் புகாா் கூறிவருகின்றனா். மழைநீா் வயல்களில் தேங்கியதால், பயிா்களை காப்பாற்றத் தேவையான உரங்கள், தேவையான நிறுவன பொருள்கள் உரக்கடைகளில் இருப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

புதுவை சட்டப்பேரவை நியமன உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் திருநள்ளாறு பகுதியில் சில உரக்கடைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

விவசாயிகள், விவசாயிகள் பெரும்பாலானவா்கள் ஸ்பிக் டிஏபி, யூரியாவை அதிகமாக விரும்பி வாங்குகின்றனா். ஆனால் அந்த உரங்கள் உற்பத்தி குறைவாக இருப்பதால் உரக்கடைகளுக்கு விநியோகம் இல்லை. விவசாயிகள் விரும்பும் இடுபொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என கூறினா்.

இதையொட்டி காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா்.கணேசனை தொடா்புகொண்டு, விவசாயிகள் விரும்பிக் கோரும் இடுபொருள்கள் தட்டுப்பாடின்றி வழங்க ஏற்பாடு செய்யுமாறு பேரவை உறுப்பினா் கேட்டுக்கொண்டாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT