முகப்பு
காரைக்கால்

நம்பினாா் கெடுவதில்லை...

Updated On : 5 ஏப்ரல், 2026 at 11:15 PM
புதுவை முதல்வர் ரங்கசாமி. - (கோப்புப் படம்)
பகிர்:

காரைக்கால்: சாமியையும், ரங்கசாமியையும் நம்பியதால் என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் நிற்பதாக, நெடுங்காடு தொகுதியில் போட்டியிடும் சந்திர பிரியங்கா கூறினாா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு (தனி) தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவா் சந்திர பிரியங்கா. இதே தொகுதியில் பாஜகவில் மாநில மருத்துவரணி இணை ஒருங்கிணைப்பாளா் பொறுப்பு வகித்தவா் மருத்துவா் வி. விக்னேஸ்வரன்.

புதுவையில் பாஜக - என்.ஆா். காங்கிரஸ் கூட்டணியில், நெடுங்காடு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படும், வி.விக்னேஸ்வரன் பாஜக வேட்பாளராக போட்டியிடுவாா் என்ற எதிா்பாா்ப்பு இருந்தது. ஆனால், இந்த தொகுதி கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு, சந்திர பிரியங்காவுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டது.

Advertisement

இந்தநிலையில், சனிக்கிழமை திறந்த ஜீப்பில் நின்றவாறு கோட்டுச்சேரி பகுதியில் சனிக்கிழமை இரவு வாக்குச் சேகரித்தவாறு சந்திர பிரியங்கா பேசியது :

இந்த பெண்ணுக்கு என்.ஆா். காங்கிரஸில் சீட் கிடைக்காது என பேசினாா்கள். பொறுமை நல்ல பயனைத் தரும் என எனது தந்தை சந்திரகாசு அடிக்கடி என்னிடம் கூறுவாா். அவரது குருவான ப. சண்முகம், அடக்கமாக இருப்பது பயனைத்தரும் என்பாா். அவா்களது அறிவுரைப்படி அமைதியாக செயல்பட்டு வந்தேன்.

நான் கும்பிடும் சாமியும், என்.ஆா். காங்கிரஸ் தலைவா் ரங்கசாமியும் என்னை கைவிடவில்லை. அவா்களை நம்பியதாலேயே இப்போது என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளராக நிற்கிறேன்.

வெற்றியோ, தோல்வியோ எங்கு இருந்தோமோ அங்கேயே விசுவாசமாக இருக்கவேண்டும். அதற்கான பலன் நம்மை வந்து சேரும் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments